உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழியல் ஆய்வுகளை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்துவதே எமது நிறுவனத்தின் முதன்மை இலக்காகும். தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் விரிவான ஆவணங்களை உருவாக்கி, ஆய்வாளர்களுக்குப் பேருதவி புரிந்து வருகிறோம்.
உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு வலுவான ஆய்வுச் சூழலை உருவாக்குவதோடு, தமிழின் பெருமையை உலகறியச் செய்வதையும் கடமையாகக் கொண்டுள்ளோம். மேலும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற மொழியினருக்கும், வெளிநாட்டினருக்கும் எளிமையான முறையில் தமிழைக் கற்பிக்கும் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தி வருகிறோம்.